தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் எஸ்.ஜானகி

By News Room

6 தசாப்தங்கள், பல ஆயிரம் பாடல்கள் பாடிய பாடகி எஸ்.ஜானகி அவர்களின் 87ஆவது பிறந்த நாள் இன்று

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று அன்புடன் அழைக்கப்படும் எஸ்.ஜானகியம்மா, இந்தியாவின் மூத்த பாடகிகளில் ஒருவர். ஆந்திராவில் பிறந்த எஸ்.ஜானகி, ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக தனது மந்திர குரலால் ஏராளமான பாடல்களுக்கு உயிர் கொடுத்துள்ளார்.

இவர் 25 மொழிகளில் 48,000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பல்வேறு தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடனான எஸ் ஜானகியின் கூட்டணி ரசிகர்களால் போற்றப்பட்டது, இருவரும் பல மொழிகளில் பல ஹிட் பாடல்களை வழங்கியுள்ளனர்.

.
மேலும்