தேவையானவை: பொருள்அளவு சிக்கன் அரை கிலோ அரிசி 4 கப் வெங்காயம் 3 (நறுக்கியது) தக்காளி 3 புதினா1 சிறிய கட்டு கொத்தமல்லி தழை 1 கைப்பிடி மிளகாய் தூள் அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் புளித்த தயிர் கால் கப் தேங்காய் பால்2 கப் வறுத்த முந்திரி 7 தண்ணீர் 7 கப் பிரியாணி இலை 2 எண்ணெய் தேவைக்கேற்ப வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன்
மசாலாவிற்கு : பச்சை மிளகாய் - 5 இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் பட்டை - 2 ஏலக்காய் - 3 கிராம்பு - 4 தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை : முதலில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அரிசியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு சிக்கனை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடித்து, அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், புதினா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிரியாணி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும். பின்பு அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு சிக்கனின் நிறம் மாறும் வரை வதக்கி விட வேண்டும்.
அதன் பிறகு அதனுடன் தக்காளி, புளித்த தயிர், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பிரட்டி விட வேண்டும். பின்பு குக்கரை சிறிது நேரம் மூடி வைத்து, தீயை குறைத்து, 10 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும். பின்பு தேங்காய் பாலை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, தீயை அதிகரித்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.
கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரிசியை சேர்த்து 8 கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் போட்டு குக்கரை மூடி, 2 விசில் வந்ததும் இறக்கி, அதன் மேல் கொத்தமல்லி தழை, முந்திரி, 1 டீஸ்பூன் எலுமிச்சஞ்சாறு சேர்த்து பரிமாறலாம். சிக்கன் பிரியாணி ரெடி!!!