உடலுறவு என்பது உடல் ரீதியா, உணர்ச்சி ரீதியா?

By News Room

ஒரு பெண், ஆணை விரும்புவதால் உடலுறவு கொள்கிறாள்.

 

ஒரு ஆண் உடலுறவு கொள்ள விரும்புவதால், உடலுறவு கொள்கிறான்.

 

வித்தியாசம் தெரிகிறதா?

 

இங்கு பெரும்பாலும், உடலுறவு என்பது ஒரு ஆணுக்கு உடல் சார்ந்த விஷயம்.

ஆனால் ஒரு பெண்ணுக்கு உடலுறவு என்பது உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சம்பந்தப்பட்ட விஷயம்.

 

காதல் காரணமாக ஒரு பெண் உடலுறவு கொள்ள சம்மதிக்கிறாள். ஆனால் காதல் இல்லாமல், உடல் தேவை காரணமாக மட்டுமே ஒரு ஆணால் உடலுறவு கொள்ள முடியும்.

 

ஒரு பெண் உங்களுடன் உடலுறவு கொள்வதற்கு முன், அவள் உங்கள் மீது மன ரீதியான உணர்வுகளை கொண்டிருக்க வேண்டும். அவள் ஆணுடன், அந்த உணர்ச்சி ரீதியான பற்றுதலை கொண்டிருக்க வேண்டும்.

 

ஒரு பெண்ணின் அந்த பிழை கூட அன்பின் பரிமாணம் கொண்டதாக இருக்கும்.

 

ஒரு பெண் தான் காதலிக்காத ஆணுடன் உடலுறவு கொள்வதை நீங்கள் காண்பது அரிது. அவள் விபச்சாரியாக இருந்தால் தவிர.

 

ஆனால் ஒரு ஆணுக்கு, இது தலைகீழாக இருக்கலாம். ஒரு ஆணுக்கு ஒரு பெண் மீது சிறிதும் அன்பு இல்லாமல் இருக்கலாம், ஆனாலும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளக்கூடும்.

 

இதனாலேயே ஒரு ஆண் விபச்சாரியை உடலுறவு கொள்வதற்காக தேவைக்கு தேடலாம். ஆண் தனது பாலியல் ஆசையை நிறைவேற்றும் முன் விபச்சாரியை காதலிக்க வேண்டிய அவசியமில்லை.

 

இப்போது, ​​இதைப் புரிந்து கொள்ளுங்கள் தோழிகளே:

 

ஒரு ஆண் தனது பாலியல் ஆசைகளுக்கு தீனி போட ஒரு பெண்ணாக, உங்களைப் பயன்படுத்தலாம். அவர் உங்களுக்கு தேவையான பணம் கூட கொடுக்க முடியும். அவர் உங்களை வெளியே அழைத்துச் செல்ல முடியும். இதெற்கெல்லாம் காரணம் அவர் உடலுறவை விரும்புகிறார், உங்களை அல்ல!

 

ஒரு ஆண் உங்களை உண்மையாக நேசிக்கிறானா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அவருடன் உடலுறவு கொள்ளாதீர்கள். சற்று தள்ளி நின்று கவனியுங்கள்.

 

நீங்கள் அவருக்கு செக்ஸ் கொடுக்காததால் அவர் உங்களை விட்டு வெளியேறினால், அவர் உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் கொடுக்கும் செக்ஸ்-ஐ மட்டுமே நேசிக்கிறார்!

 

அன்புள்ள இளம் வயது பெண்களே!

 

- நீங்கள் வளர்ந்து திருமண வாழ்க்கையின் பயணத்திற்கு நெருங்கி வரும்போது..

- உங்களுக்கான ஒரு கணவரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும்  தேர்வு செய்யலாம்.

- ஆனால் உங்கள் குழந்தைகள் தங்கள் தந்தையை தேர்ந்தெடுக்க முடியாது

- அவர்களுக்கான தந்தையைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​தயவு செய்து, ஒரு தந்தையாக, ஒரு நண்பனாக, ஒரு ஆசிரியராக மற்றும் ஒரு வழிகாட்டியாக இருக்க தகுதியான ஒரு ஆணைத் தேர்ந்தெடுங்கள்.

 

பெண்களுக்கான கைவிலங்குகளில் மிகவும் மென்மையானது இந்த திருமண முக்காடு, எனவே ஆழ்ந்து சிந்தித்து, சிறைத் வாழ்க்கையைத் தவிர்க்க, உங்கள் இல்லத் துணையை கவனமாகத் தேர்ந்தெடுத்து, புத்திசாலித்தனமாக முடிவெடுங்கள். 

.
மேலும்