#மாற்றான் கை பட்டதால் பெண் ஒன்றும் இழிவல்ல
#பெண்மை என்ற சொல் உடல் சார்ந்த ஒன்றுமில்லை உள்ளன்பு உயர் தியாகம் இவை இன்றி வேறில்லை
#அவமானம் என்றல்ல அதில் தவறு ஒன்றுமில்லை தன்மானம் காப்பதற்குத் தனியானால் தவறில்லை
#மஞ்சள் கயிறு கட்டி விட்டு மாடு போல நடத்துபவனை நெஞ்சை ஏறி மிதித்து மீண்டு வந்தால் பாவமில்லை
#கட்டிலினை அலங்கரிக்கும் பொருளுமில்லை _ நீங்கள் காமத்தில் விளையாடும் பொம்மை இல்லை சமுதாயம் தூற்றும் என அஞ்சிக் கொண்டு _ நாங்கள் சாகும் வரை உரிமை இழக்க அடிமை இல்லை
#உள்ளத்தின் உணர்ச்சிகளை புரியாமல் வெறும் உடல் தின்னும் மிருகத்தை கட்டிக் கொண்டு
#பண்பாடு கலாசாரம் என்று சொல்லிக் கொண்டு _ நாங்கள் படும் பாடை சரி செய்யும் சமுதாயமே .. வந்து விட்டு உண்டு விட்டு சென்று விடுவீர் _ எங்கள் வாழ்க்கை வீணாய் போய் விட்டால் நீயா தருவீர் ? காமத்தில் மட்டும் தான் ஆண்களின் பங்கு _ நாங்கள் காலமும் செய்ய இங்கு ஆயிரம் உண்டு
#மெட்டி போட்டு மேளம் தட்டி மேடை மீது தாலி கட்டி கையைப் பிடித்தவன் கயவன் என்றால் நானா பொறுப்பு ? முதல் வாழ்க்கை முறிதல்
#பாவமுமல்ல _ அந்த பாவி தொட்ட உடல் என்பதால் கேவலமல்ல மனம் பார்த்து மணம் கொள்பவன் ஆண்களின் கூட்டம் மறுமணம் ஆயினும் கை பிடிப்பவன் ஆண்டவன் தோற்றம்
#திருமணம் தோற்பதால் வாழ்க்கை ஒன்றும் இருளல்ல மறுமணத்தை தேடும் பெண் மட்டமான பொருளல்ல நாங்கள் வாழ்வில் தடுக்கித் தான் போனோம் தவறி ஒன்றும் போகவில்லை..
#மறுமணம் என்பது மாபெரும் தவறல்ல!