பூர்வ ஜென்ம பலனுக்கு மதுரை பாதாள குபேர பைரவர் பூஜை

By saravanan

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பலவிதமான சுவாரசியமான சுவாமி சன்னதிகள் இருக்கின்றன.

அப்படி வெளிப்புறத்தில் இருக்கக்கூடிய சுவாரசியமான கோயில்களில் ஒன்றுதான் பாதாள குபேர பைரவர் கோயில்.

மதுரை வடக்கு கோபுர வாசல் மேற்கு கோபுர வாசல் சந்திக்கும் இடத்தில் பழைய பெமினாஜவுளி கோபி அய்யங்கார் கடை மூலையில் மீனாட்சி அம்மன் கோயில் பூந்தோட்ட வளாகத்தில் சரியாக தினமும் ராகு கால நேரத்தில் மட்டுமே திறந்து பூஜைகள் நடக்கும் அற்புத “குபேர பாதாள பைரவர் கோயில்” அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சன்னதி ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப்படும்.

 அதாவது ஒவ்வொரு நாளும்  வரக்கூடிய ராகு காலத்தில் மட்டுமே கோயிலின் சன்னதி திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படும் என்பது சிறப்புகளாக இருக்கின்றது தற்பொழுது வரை அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.

அதுவும் ராகு காலத்தில் நடை திறக்கப்பட்டு ராகு காலம் முடியும் நேரத்தில் நடை சாத்தப்படும்.ராகு காலத்தில் மட்டுமே இந்த பைரவருக்கு பூஜைகள் நடைபெறும்.

*திங்களன்று* காலை 7.30 முதல் 9 மணி வரையும் *செவ்வாயன்று* மதியம் 3 முதல்  4.30 மணி வரையும் *புதனன்று*  12 மணி முதல் 1.30மணி வரையும் *வியாழனன்று* மதியம்1.30 மணி முதல் 3.00 மணி  வரை *வெள்ளிக்கிழமையனறு* 10.30 முதல் 12 மணி வரையும் *சனிக்கிழமையன்று* காலை 9 முதல் 10.30 மணி வரையும் *ஞாயிறன்று* 4.30 மணி முதல் 6 மணி வரை மட்டுமே இந்த கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது.

ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப்படும் இந்த பாதாள குபேர பைரவரை வழிபடுவதன் மூலமாக செல்வ செழிப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தீர வழி வகுக்கக் கூடியவையாகவும்,

 திருமண தடை, குழந்தை பாக்கியம், நீண்ட ஆயுளுடன்ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும் என்று சொல்லப்படுகின்றது.

.இந்த  பைரவர் பாதாள குபேர பைரவராக காட்சியளிப்பதால் செல்வச் செழிப்பிற்கு பஞ்சம் இருக்காது.  அது மட்டும் அல்லாது குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள்,  தடைகள், சிக்கல்கள், பில்லி, சூனியம் என அனைத்தையும் விரட்டி அடிக்கிறார்.பக்தர்கள் வேண்டும் வேண்டுதலுக்கு உடனே செவிசாய்த்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார்.

பூர்வ ஜென்ம பலன் இருப்பவரால் மட்டுமே இந்த பைரவரை தரிசிக்க முடியும்.

ராகு காலத்தில் மட்டும் திறக்கப்பட்டு பூஜை செய்யப்படும் இந்த குபேர பைரவர் சக்தி வாய்ந்த பைரவராக இருப்பதினால்  மக்கள் அனைவருமே அ/மிமீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தால் இக்கோயிலுக்கு வந்து குபேர பைரவரை தரிசனம் செய்யலாம்

.
மேலும்