சபரிமலை 18 படிகளும் அதன் சிறப்பும்?

By nandha

சபரிமலை அய்யப்பன் கோயில் என்றாலே பக்தர்களின் எண்ணத்தில் தோன்றுவது 18 படிகள் தான். விரதமிருந்து, இருமுடி சுமந்து பக்தர்கள் ஐயனை 18-ம் படி ஏறிச்சென்று தரிசித்தலே மிகவும் சிறப்பானதாகும். சுவாமியை இவ்வாறு தரிசித்தால் தான் ஒரு மண்டலம் விரதமிருந்து கோயில் சென்று வந்ததன் முழுப் பலன்களையும் புண்ணியத்தையும் பெறமுடியும் என்பது ஐதீகம்.

இந்த 18 படிகளில் ஒவ்வொரு படியும் ஐயப்பனின் திருநாமங்களால் அழைக்கப்படுகிறது. அவையாவன: 1   - ஆம் படி    - குளத்தூர் பாலன் 2   - ஆம் படி    - ஆரியங்காவு அனந்த ரூபன் 3   - ஆம் படி    - எரிமேலி ஏழைப் பங்காளன் 4   - ஆம் படி    - ஐந்துமலைத் தேவன் 5   - ஆம் படி    - ஐங்கரன் சோதரன் 6   - ஆம் படி    - கலியுக வரதன் 7   - ஆம் படி    - கருணாகரத் தேவன் 8   - ஆம் படி    - சத்யப்பரிபாலகன் 9   - ஆம் படி    - சற்குண சீலன் 10 - ஆம் படி    - சபரிமலை வாசன் 11 - ஆம் படி    - வீரமணி கண்டன் 12 - ஆம் படி    - விண்ணவர் தேவன் 13 - ஆம் படி    - மோகினி பாலன் 14 - ஆம் படி    - சாந்த சுவரூபன் 15 - ஆம் படி    - சற்குண நாதன் 16 - ஆம் படி    - நற்குணக் கொழுந்தன் 17 - ஆம் படி    - உள்ளத்தமர்வோன் 18 - ஆம் படி    - ஸ்ரீ ஐயப்பன்

முதல் ஐந்துபடிகள் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களையும்; 6 முதல்  13 படிகள்வரை அஷ்டமா சித்திகளையும்; 14, 15, 16 படிகள் மூன்று வித குண ங்களையும்; 17-ஆவது படி ஞானத்தையும்; 18-ஆவது படி அஞ்ஞானத்தையும்  குறிக்கின்ற வகையில் அமைந்துள்ளதாக ஐதீகம்.

சபரிமலை கோயிலில் அமைந்துள்ள 18 படிகளும் தெய்வாம்சம் நிறைந்தவை: ஒன்றாம் படியில்     - சூரியன் இரண்டாம் படியில்    - சிவன் மூன்றாம் படியில்    - சந்திரன் நான்காம் படியில்    - பராசக்தி ஐந்தாம் படியில்    - செவ்வாய் ஆறாம் படியில்        - ஆறுமுகப் பெருமான் ஏழாம் படியில்        - புதன் எட்டாம் படியில்    - மகாவிஷ்ணு ஒன்பதாம் படியில்    - குரு பகவான் பத்தாம் படியில்    - பிரம்மா பதினோறாம் படியில்    - சுக்கிரன் பன்னிரண்டாம் படியில்    - திருவரங்கன் பதின்மூன்றாம் படியில்    - சனீஸ்வரன் பதினான்காம் படியில்    - எமதர்மன் பதினைந்தாம் படியில்    - ராகு பதினாறாம் படியில்     - காளி பதினேழாம் படியில்    - கேது பதினெட்டாம் படியில்    - விநாயகர்

ஐயப்பன் சுவாமி கொடிய அரக்கியான மகிஷியை வதம் செய்தபோது பயன்படுத்திய ஆயுதங்கள் 18 அவை; வில், வாள், பரிசை, குந்தம், ஈட்டி, கைவாள், முள்தடி, முசலம்,  கதை, அங்குசம், பாசம், பிந்திப்பாலம், வேல், கடுநிலை, பாஸம், சக்கரம், பரிகம், சரிகை  இந்த 18 வகை ஆயுதங்களும் 18 படிகளாக அமையப்பெற்றன என்பதும் ஒரு ஐதீகம்.

சபரிசாஸ்தா ஐயப்பனைக் காண கடும் விரதமிருந்து வரும் பக்தர்கள் அனைவரும்  புனிதம் நிறைந்த - புண்ணியம் அருள்கின்ற இந்த 18 படிகளில் ஏறிச்சென்று அகிலம்  காத்திடும் அய்யப்பப்பெருமானை தரிசித்தலே சாலச்சிறந்ததாகும்.

.
மேலும்