சபரிமலை அய்யப்பன் கோயில் என்றாலே பக்தர்களின் எண்ணத்தில் தோன்றுவது 18 படிகள் தான். விரதமிருந்து, இருமுடி சுமந்து பக்தர்கள் ஐயனை 18-ம் படி ஏறிச்சென்று தரிசித்தலே மிகவும் சிறப்பானதாகும். சுவாமியை இவ்வாறு தரிசித்தால் தான் ஒரு மண்டலம் விரதமிருந்து கோயில் சென்று வந்ததன் முழுப் பலன்களையும் புண்ணியத்தையும் பெறமுடியும் என்பது ஐதீகம்.
இந்த 18 படிகளில் ஒவ்வொரு படியும் ஐயப்பனின் திருநாமங்களால் அழைக்கப்படுகிறது. அவையாவன: 1 - ஆம் படி - குளத்தூர் பாலன் 2 - ஆம் படி - ஆரியங்காவு அனந்த ரூபன் 3 - ஆம் படி - எரிமேலி ஏழைப் பங்காளன் 4 - ஆம் படி - ஐந்துமலைத் தேவன் 5 - ஆம் படி - ஐங்கரன் சோதரன் 6 - ஆம் படி - கலியுக வரதன் 7 - ஆம் படி - கருணாகரத் தேவன் 8 - ஆம் படி - சத்யப்பரிபாலகன் 9 - ஆம் படி - சற்குண சீலன் 10 - ஆம் படி - சபரிமலை வாசன் 11 - ஆம் படி - வீரமணி கண்டன் 12 - ஆம் படி - விண்ணவர் தேவன் 13 - ஆம் படி - மோகினி பாலன் 14 - ஆம் படி - சாந்த சுவரூபன் 15 - ஆம் படி - சற்குண நாதன் 16 - ஆம் படி - நற்குணக் கொழுந்தன் 17 - ஆம் படி - உள்ளத்தமர்வோன் 18 - ஆம் படி - ஸ்ரீ ஐயப்பன்
முதல் ஐந்துபடிகள் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களையும்; 6 முதல் 13 படிகள்வரை அஷ்டமா சித்திகளையும்; 14, 15, 16 படிகள் மூன்று வித குண ங்களையும்; 17-ஆவது படி ஞானத்தையும்; 18-ஆவது படி அஞ்ஞானத்தையும் குறிக்கின்ற வகையில் அமைந்துள்ளதாக ஐதீகம்.
சபரிமலை கோயிலில் அமைந்துள்ள 18 படிகளும் தெய்வாம்சம் நிறைந்தவை: ஒன்றாம் படியில் - சூரியன் இரண்டாம் படியில் - சிவன் மூன்றாம் படியில் - சந்திரன் நான்காம் படியில் - பராசக்தி ஐந்தாம் படியில் - செவ்வாய் ஆறாம் படியில் - ஆறுமுகப் பெருமான் ஏழாம் படியில் - புதன் எட்டாம் படியில் - மகாவிஷ்ணு ஒன்பதாம் படியில் - குரு பகவான் பத்தாம் படியில் - பிரம்மா பதினோறாம் படியில் - சுக்கிரன் பன்னிரண்டாம் படியில் - திருவரங்கன் பதின்மூன்றாம் படியில் - சனீஸ்வரன் பதினான்காம் படியில் - எமதர்மன் பதினைந்தாம் படியில் - ராகு பதினாறாம் படியில் - காளி பதினேழாம் படியில் - கேது பதினெட்டாம் படியில் - விநாயகர்
ஐயப்பன் சுவாமி கொடிய அரக்கியான மகிஷியை வதம் செய்தபோது பயன்படுத்திய ஆயுதங்கள் 18 அவை; வில், வாள், பரிசை, குந்தம், ஈட்டி, கைவாள், முள்தடி, முசலம், கதை, அங்குசம், பாசம், பிந்திப்பாலம், வேல், கடுநிலை, பாஸம், சக்கரம், பரிகம், சரிகை இந்த 18 வகை ஆயுதங்களும் 18 படிகளாக அமையப்பெற்றன என்பதும் ஒரு ஐதீகம்.
சபரிசாஸ்தா ஐயப்பனைக் காண கடும் விரதமிருந்து வரும் பக்தர்கள் அனைவரும் புனிதம் நிறைந்த - புண்ணியம் அருள்கின்ற இந்த 18 படிகளில் ஏறிச்சென்று அகிலம் காத்திடும் அய்யப்பப்பெருமானை தரிசித்தலே சாலச்சிறந்ததாகும்.