வேத விநாயகர் வணங்கினால் நிச்சயம்?

By Tejas

திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனை...நான்கு வேதங்களும் வழிபட்டதாக தல புராணம் எடுத்துரைக்கிறது.

இந்த ஆலயத்தில் வேதவிநாயகர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். வேதம் கேட்பதில் விருப்பமுள்ள பிள்ளையார் இத்தலத்தில் தலை சாய்த்தபடி அருள்கிறார். எனவேதான் இவர் வேத விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

நான்கு வேதங்களாகிய ரிக், யஜீர், சாமம், அதர்வண வேதங்களை சிவன் அருளிச் செய்ததை...கருவறை வாசலில் அமர்ந்து செவி சாய்த்த படி கேட்டுக் கொண்டிருக்கிறார், வேதவிநாயகர்.

காணாபத்தியம்...

இந்து மதத்தினுள் உள்வாங்கப்பட்ட சமயமான காணாபத்தியம் எனும் பிரிவு விநாயகரை மையப்படுத்திய சமயம்.

இந்துக்களின் புராணங்களில் விநாயகர் மற்றைய இந்துக்கடவுள்களான சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாகவும் முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் கூறப்படுகிறார். இக்கடவுளின் வாகனம் மூஞ்சூறு .

’கணேச புராணம்’, கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் நான்கு அவதாரங்களாக அவதரிப்பதாகக் கூறுகின்றது.

கிருத யுகம்..

காஸ்யப முனிவருக்கும் அதீதீ தேவிக்கும் பிள்ளையாக அவதரித்து அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். கிருத யுக அவதாரத்தில் பிள்ளையாரின் திருநாமம் மகாகடர்.

திரேதாயுகம்..

அம்பிகை பார்வதியின் பிள்ளையாக அவதரித்து, அழகான மிகப்பெரிய மயிலை தம் குழந்தைப் பருவத்தில் பிடித்து விளையாடியதால் மயூரேசர் என்ற திருநாமம்.

துவாபரயுகம்..

கஜானனன் என்ற திருநாமத்துடன் அவதரித்து, பராசர மகரிஷி மற்றும் பராசர மகரிஷியின் தேவி வத்ஸலாவால் சிறப்பாக வளர்க்கப்பட்டார்.

கலி யுகம்...

சிவபெருமானுக்கும் அம்பிகை பார்வதி தேவிக்கும் குழந்தையாக அவதரித்து அதர்மம் செய்வோரின் செயல்களில் தடங்கல்களையும் தர்மநெறியில் இருப்போரின் இன்னல்களைப் போக்கியும் வருவதாகக் கணேச புராணம் குறிப்பிடுகின்றது...!!

.
மேலும்