திருநெல்வேலி ஸ்பெஷல் வாழை இலை துவையல்.
தேவையான பொருட்கள்:
ஒரு வாழை இலை – துண்டு துண்டுகளாக நறுக்கியது,
கடலைபருப்பு – 2 தேக்கரண்டி,
தொலிபருப்பு – 2 தேக்கரண்டி,
சின்ன வெங்காயம் – 6 உரித்தது,
பூண்டு – 5 உரித்தது,
மொளகா வத்தல் – 5,
புளி – ஒரு சிறு உருண்டை,
உப்பு – தேவைக்கு.
செய்முறை:
அடுப்பில் இருப்புச்சட்டி வைத்து சூடேறியதும் நல்லெண்ணெய் ஊத்தி காய்ந்ததும் கடலைபருப்பு, தொலிபருப்பு, சுன்னவெங்காயம், பூண்டு, மொளகாவத்தல் ஆகியவற்றை ஒன்னு ஒன்னா போட்டு வதக்கி கடைசியா நறுக்கிய வாழை இலைத்துண்டுகளையும் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
வாழை இலைகளை சேர்த்ததும் பொட்டு வெடி வெடிப்பது போல சத்தம் வரும். இந்த பக்குவத்தில் நன்றாக வதக்கி இறக்கி ஆற வைத்து, பின் புளியும், உப்பு சேர்த்து அரைத்து எடுத்தீல் வாழை இலை துவையல் தயார்.
நான் இன்னைக்கு முதல் தடவை முயற்சி பண்ணதால முரட்டு வாழை இலை பயன்படுத்திட்டேன். அதிகமா நார் தங்குது. நீங்க இளம் வாழை இலையா பயன்படுத்துங்க.
இது இட்லி, தோசை, சாதத்துக்கு தொட்டுக்க பேஷா இருக்கு போங்க…