விதை எதனால் வீக்கம்/ பெரிதாகி உள்ளது என்பதை சரியாக அறிய அல்ட்ராசவுண்ட் முறையில் பரிசோதிக்க வேண்டும். மாலிக்னன்சியாக இருந்தால் ( ஒரு வகை கான்சர் கட்டி) மேலும், இது வேகமாக பரவாமல் பார்த்து கொள்ள வேண்டும். என்ன பிரச்சனை என அறிந்த பிறகு தான் அதற்கு ஏற்ற சிகிச்சை அளிக்க முடியும்.
விரை வீக்கமாக இருந்தால் மைனர் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்துவிடலாம். இந்த அறுவை சிகிச்சையின் பெயர் விரைநீர்க்கட்டு அறுவை சிகிச்சை. இதனால் விதை அளவை பழைய நிலைக்கு கொண்டுவந்துவிடலாம். ஒருவேளை சிறுநீரில் சீழ் கழிதல் அல்லது விதை பகுதியில் சீழ் கழிதல் போன்ற பிரச்சனையாக இருந்தால் இதை ஆன்டி- பயாடிக்ஸ் கொண்டு சரி செய்ய வேண்டும்.
மாலிக்னன்சியாக இருந்தால் முதலில் சரியாக பரிசோதனை செய்ய வேண்டும். இது ஊர்ஜிதம் ஆனால், சிகிச்சை மேற்கொள்ளும் முன்னரே விதைகளை நீக்க வேண்டும் என்றும் இல்லையேல் இது வேகமாக பரவும் அபாயம் இருக்கிறது என்று கூறப்படுகிறது.
இதற்கு சிடி ஸ்கேன் செய்து கட்டியை பற்றி ஆராய வேண்டியது அவசியம். எதற்கும் தாங்கள் ஒரு குடும்ப வைத்தியரை அணுகி தங்கள் நோய் பற்றி கலந்து ஆலோசித்து சரியான முடிவை எடுத்துக்கொள்ளுங்கள். என்ன நோயாக இருந்தாலும் வைத்தியரை நாடுவதே சிறந்த முடிவு.