Breaking News :

Friday, May 02
.

அழுக்கு படிந்த நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?


மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறுப்பும் இன்றியமையாததாகும். இதில் நுரையீரல் முக்கியமான பணிகளை செய்யும்.

புகைப்பிடிப்பது, மாசடைந்த காற்று, வாகனப்புகை போன்றவற்றால் நுரையீரல் பாதிப்பு அடைகின்றன.
பாதிக்கப்பட்ட நுரையீரலை சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஓர் அற்புதமான நாட்டு மருந்தை பார்ப்போம்.

தேவையானவை:
மஞ்சள் தூள் – 4 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 800 கிராம் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
நாட்டுச்சர்க்கரை – 800 கிராம்
தண்ணீர் – 2 லிட்டர்,

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து, அத்துடன் இஞ்சி, பூண்டு, மஞ்சள் மற்றும் நீர் ஆகியவற்றை சேர்த்து, குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்ததும் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி விட்டு, ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். இந்த கலவையை தினமும் இருவேளை உட்கொண்டு வர வேண்டும்.

அதிகாலை எழுந்தவுடன் காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு வர வேண்டும். பின் இரவு உணவு உண்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு வர வேண்டும்.

இந்த நாட்டு மருந்தை உட்கொண்டு வரும் போது, தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இதனால் உடலில் இருந்து டாக்ஸின்களும் வெளியேறி விடும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.