Breaking News :

Tuesday, April 15
.

விஷம் குடிச்சவங்க இத சாப்பிட்டால் பொழைக்கலாம்?


வசம்பு பிறந்த குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் பயன்படுத்தும் ஓன்று. வசம்பில் எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தையும் போக்கக்கூடியது. எனவே கண்டிப்பாக வீட்டில் வசம்பு வாங்கி வைத்திருப்பது அவசியம்.

வசம்பை பொடி செய்து இரண்டு கரண்டி அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். வசம்பு அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

வசம்பை விஷம் குடித்தவர்களுக்கு உடனேயே இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் கொடுத்தால் உள்ளே சென்ற விஷம் முழுக்க வெளியே வந்து விடும்.

அதுமட்டுமல்லாமல் கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் ஏதும் பரவாமல் இருக்கவும் வசம்பை பயன்படுத்துகின்றனர். வசம்பு பசியைத் தூண்டி உடலில் உள்ள சோம்பலை நீக்கும்.

குழந்தைகளுக்கு காய்ந்த வசம்பை பாலில் கலந்து சூடுபடுத்தி கொடுப்பார்கள், அதனால் குழந்தைகளுக்கு சிறு தொற்றுநோய்களோ மற்றும் பசியின்மையோ வராமல் தடுக்கப் படுகிறது. அதனாலேயே வசம்பு பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.

மஞ்சள் தூள், கருவேப்பிலை, மற்றும் சுடு தண்ணீர் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து அவற்றை கிருமி நாசினியாகவும் பயன்படுத்தலாம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.