Breaking News :

Tuesday, May 06
.

சனி தசா புக்தி காலங்களில் செய்ய வேண்டியவை?


முடிந்த அளவு நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.

சிறு தொலைவில் இருக்கும் விஷயங்களுக்காக செல்வது என்றாலும் முடிந்தவரை நடந்து செல்லுங்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை குளித்து  சுத்தமான உடைகளை உடுத்துங்கள்.

சனி புத்தியை மழுங்கச் செய்யும் என்பதால் அடிக்கடி. ,தண்ணீர் குடியுங்கள்.

கால், முட்டி பாதங்கள் முதலானவை சனியின் காரகத்துவங்களில்வருவதால் கால்களை பராமரிப்பது அவசியம்.

சனி தசா புக்தி காலங்களில், அஷ்டம சனி ஏழரை சனி காலங்களில் தம்பட்டம் அடித்துக் கொள்வது ஆகாது.

முடிந்தவரை அன்னதானம் செய்யுங்கள்.

எப்பொழுதும் நீங்கள் இருக்கும் வீட்டை, குப்பை சேராமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

குடை, கம்பளி போர்வை, செருப்பு போன்றவை தானமாகத் தருவது சிறப்பு.

அனைத்திற்கும் மேலாக இறை வழிபாடு பிரார்த்தனை.

விநாயகர் மற்றும் ஹனுமன் வழிபாடு எதிர்த்துப் போராடும் மனோபலத்தை கொடுக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.