Breaking News :

Saturday, May 03
.

இத படிச்சா கண்டிப்பா சிரிப்பீங்க!


டாக்டர்.. காதுவலிக்கு போட மாத்திரை கொடுத்தீங்களே.. அது பெருசா இருக்கே... உள்ள போகுமா..

 

~ மாத்திரைய போட்டு தண்ணி விட்டா உள்ள போகும் மா...

 

~ சின்ன வயசுல என் காதுல தண்ணி போனதுக்கு 1 மாசம் எனக்கு காதே கேக்கல சார்.. அதான் தண்ணி விட யோசிக்கறேன்... வேணும்னா மாத்திரைய powder பண்ணி போடவா...

 

~ எம்மா... அது வாய் வழியா சாப்டணும் மா..

 

~ ஆனா எனக்கு வாய் நல்லாதானே இருக்கு சார்...

 

~ எம்மா.. வாய் ல போட்டு தண்ணி விட்டா காதுக்கு போயிரும் மா...

 

~ காத பஞ்சு வெச்சு அடைக்கணுமா சார்...

 

~ எதுக்கு..

 

~ வாய் ல போட்ட மாத்திரை காது வழியா வெளில வராம இருக்க...

 

~ எம்மா.. நீ எப்பவுமே இப்டிதானா..

 

~ இல்ல சார்.. மருந்து விடும்போது மட்டும் பஞ்சு வெச்சுப்பேன் சார்...

 

~ என்னத்தையோ வெச்சுக்கோ மா.. கிளம்பு மா...

 

~ டாக்டர் சாப்பாடு எப்டி சாப்ட சார்..

 

~ வாயால தான்..

 

~ அது காதுக்கு போகாது ல்ல சார்...

 

~ எம்மா.. நாம வாய் ல சாப்பிடறது எல்லாமே வயித்துக்கு தான் மா போகும்...

 

~ அப்போ மாத்திரை காதுக்கு போகாதா சார்...

 

~ 🙄🙄 (திரும்பவும் முதல்ல இருந்தா... ) போகும் மா.. நீ இப்ப போகல னா எனக்கு இப்ப பேதி போகும்..... அதுக்கு அப்றம் உயிர் போகும்...

 

~ அப்போ நீங்க செத்துப்போனா வேற எந்த டாக்டர் கிட்ட என் காதுக்கு மருந்து வாங்கணும் சார்...???

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.