Breaking News :

Friday, May 02
.

எங்கிருந்தாவது கிளியோபாட்ரா வருவாள்!


காதலில் மலர்தல்...

உண்மை பரிமாணம்...

 

🌸காதலின் முதல்பாடம்...

காதலை கேட்பது அல்ல...

காதலைக் கொடுப்பது...

 

🌸கொடுப்பவர் ஆகுங்கள்...

ஆனால், 

மக்கள் நேர் எதிராகச் செய்கிறார்கள்...

 

'கொடுக்கும்போது கூட...

 

அது திரும்பவேண்டும் என்ற 

எண்ணத்துடன்தான் கொடுக்கப்படுகிறது...'

 

இது ஒரு பேரம்.

 

🌸அவர்கள் பகிர்ந்து கொள்வதில்லை...

 

தங்கு தடையின்றி பகிர்ந்து கொள்வதில்லை...

 

ஒரு நிபந்தனையோடு 

பகிர்ந்து கொள்கின்றனர்...

 

🌸ஒரு மூலையில் கவனித்துக் கொண்டே இருக்கின்றனர்...

 

அது திரும்ப வருகிறதா, இல்லையா என்று பார்க்கின்றனர்...

இந்த மிகப் பாவப்பட்ட மக்கள் !

 

🌸"காதலின் இயற்கையான

இயக்கம் என்ன? 

என்று அவர்களுக்குத் தெரியவில்லை...

 

நீங்கள் பொழியுங்கள்...

அது வரும்.

 

🌸அப்படி வரவில்லையா?

எதற்கும் கவலைப்பட வேண்டாம்...

 

ஏனென்றால், காதலன் அறிவான், 

காதலிப்பது மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்று...

 

அது வருகிறதா? நல்லது.

மகிழ்ச்சி பன்மடங்கு ஆகிறது.

 

🌸ஒரு போதும் திரும்பி 

வரவில்லையென்றாலும் கூட...

 

'காதலித்தல்' என்ற செயலிலேயே 

நீங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவீர்கள்...

பரவசம் கொள்வீர்கள்...

 

யார் கவலைப்படுகிறார்கள்.

வருகிறதா, இல்லையா என்று?

 

🌻காதல், 'தனக்கே உரித்தான

சொந்த உள்ளார்ந்த மகிழ்ச்சியைப்' பெற்றிருக்கிறது...

 

நீங்கள் காதலிக்கும்போது அது நிகழ்கிறது.

 

🌻பலனை எதிர்பார்த்துக் 

காத்திருக்கத் தேவையே இல்லை.

 

மெல்ல மெல்ல மிகுதியாகக், 

காதல் உங்களை நோக்கித் திரும்ப 

வருவதை நீங்கள் காணலாம்...

 

🌻ஒருவன் காதலிக்கிறான்...

 

காதலைப் பற்றி அறிந்து கொள்கிறான்...

 

காதலிப்பதன் மூலம்...

அதில் நீந்துவதன் மூலம்...

 

நீச்சல் கற்பதுபோல், 

காதலிப்பதன் மூலம் காதல் கற்கப்படுகிறது...

 

🌻மக்கள் மிகவும் கஞ்சத்தனமானவர்கள்...

 

யாராவது பெரிய காதலி கிடைப்பதற்க்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்...

 

சும்மா காத்திருக்கிறார்கள்...

 

எங்கிருந்தாவது கிளியோபாட்ரா வருவாள்...

 

பிறகு தங்கள் இதயத்தைத் திறக்கலாம் 

என்று இருக்கிறார்கள்...

 

🌻ஆனால், நாளைடைவில்...

அவர்கள்....

எப்படி இதயத்தை திறப்பது என்பதையே... 

முற்றிலும் மறந்து போய் விடுகிறார்கள்...

 

🌸காதலின் ஒரு வாய்ப்பைக்

கூட இழக்காதே...

 

தெருவில் செல்லும்போது கூடக் 

காதலிக்க முடியும்...

பிச்சைக்காரனைக் கூட 

காதலிக்க முடியும்...

 

அவனுக்கு ஏதாவது நீங்கள்

கொடுத்துத்தான் ஆக வேண்டும் 

என்று கட்டாயமில்லை...

 

குறைந்தபட்சம் நீங்கள் சிரிக்கலாமே, 

அதற்குச் செலவில்லையே...

 

🌸ஆனால், அந்தப் புன்சிரிப்பே உங்கள் இதயத்தைத் திறக்கிறது...

 

உங்கள் இதயம் அதிக 

உயிர்த்துடிப்புப் பெறுகிறது...

 

🌸யாரவது ஒருவரின் கையைப் பிடியுங்கள்...

இதயத்தில் மலருங்கள்...

 

நண்பர் அல்லது புதியவர்...

 

சரியான ஆள் கிடைத்தால்தான், 

அன்பு செய்யமுடியும் என்று 

காத்திருக்காதீர்கள்...

 

அப்படியென்றால் சரியான ஆள் 

கிடைக்கவே மாட்டான்.

 

🌸வாழ்க்கையில், 

அன்பு செய்து கொண்டே செல்லுங்கள்...

 

எவ்வளவு அதிகமாக நேசிக்கிறீர்களோ, 

அவ்வளவு அதிகமாக, 

'சரியானவர்' கிடைப்பது சாத்தியம் ஆகும்...

 

🌸ஏனென்றால், 

உங்கள் இதயம் மலரத் தொடங்குகிறது...

 

'மலரும் இதயம் ஏராளமான

தேனீக்களை, அன்பர்களைக்

கவர்கிறது'

 

🌸ஆனால், நீங்கள் மிகத் தவறான வழியிலே பயிற்சி கொடுக்கப்படுகிறீர்கள்...

 

முதலில், ஒவ்வொருவரும் தான் ஏற்கனவே 

ஒரு காதலன் அல்லது காதலி என்கிற தவறான மனப்பதிவோடு வாழ்கிறீர்கள்...

 

🌸நீங்கள் பிறந்தவுடனேயே...

நீங்கள் காதலர் என்று எண்ணுகிறீர்கள்...

 

'ஒருவர், காதலன் அல்லது காதலி ஆவது 

என்பது அவ்வளவு எளிதானது அல்ல'

 

ஆம்.

 

அதில் ஒரு உள்ளார்ந்த 

ஒரு ஆற்றல் உள்ளது. 

 

அந்த உள்ளாற்றல் பயிற்சி 

கொடுக்கப்பட வேண்டும்...

 

🌸ஒரு விதை இருக்கிறது...

அது பூவாக வேண்டும்...

 

நீங்கள் உங்கள் விதையை 

எடுத்துக் கொண்டே செல்லலாம்...

 

ஒரு தேனீ கூட வராது.

 

🌸எப்போதாவது விதைகளை

நோக்கித் தேனீக்கள் வருவதைக் கண்டிருக்கிறீர்களா?

 

அவைகளுக்கு, விதைகளிலிருந்துதான் 

பூக்கள் வருகின்றன என்று தெரியாதா?

 

ஆனால், பூக்களாக ஆகும்போதே 

அவை வருகின்றன...

 

பூவாக மலருங்கள்...

விதையாக தங்கிவிடாதீர்கள்.

 

ஓஷோ: அதி உன்னத வழி.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.