Breaking News :

Friday, May 02
.

கும்பாபிஷேகம் - ஒரு பார்வை


கும்பாபிஷேகம்
    
கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும் என்பது நியதி. சில இடங்களில் பல்வேறு காரண காரியங்களுக்காக அவை தள்ளியும் போகலாம். இந்த கும்பாபிஷேகம் பற்றிய புரிதல் பலருக்கும் எப்படி இருக்கும் என்பதே சந்தேகம்தான். அது பற்றிய சில விஷயங்களை இங்கே சிறு குறிப்பாக பார்க்கலாம்.

நான்கு வகை கும்பாபிஷேகம் :

1. ஆவர்த்தம் :

ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்து, பிரதிஷ்டை செய்யப்படும் விக்கிரகங்களுக்கு கும்பாபிஷேகம் செய்வது.

2. அனாவர்த்தம் :

வழிபாடு இன்றியும், இயற்கை சீற்றங்களாலும் சிதைந்து போன ஆலயங்களை புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.

3. புனராவர்த்தம் :

கருவறை, பிரகாரம், கோபுரம் ஆகியவற்றில் ஏதாவது சிதைந்து போயிருந்தால், அதற்கு பாலாலயம் செய்து புதுப்பித்து, அஷ்ட பந் தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்துவது.

4. அந்தரிதம் :

கோவிலுக்குள், ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் அதன் பொருட்டு செய்யப்படும் வழிபாடு.

கும்பாபிஷேகத்தில் நடைபெறும் பூஜைகள்:

அனுஞை:

காரியங்களைச் செய்யும் ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்து எடுத்து, இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.

சங்கல்பம் :

இறைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.

பாத்திர பூஜை :

இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்கான பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு, அந்தந்த பாத்திரங்களுக்குரிய தேவதைகளை பூஜித்தல்.

கணபதி பூஜை :

காரியம் வெற்றியாக நிறைவேற கணபதியை வழிபடுதல்.

வருண பூஜை :

கோவிலை சுத்தம் செய்வதற்காக, வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வணங்குதல்.

பஞ்ச கவ்யம் :

ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால், தயிர், நெய், பசுநீர், பசுசாணம் முதலியவைகளை வைத்து செய்யப்படும் கிரியை.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub