Breaking News :

Monday, May 20
.

பெண்கள் சமையலறைக்கு சென்றதும் முதலில் எதை சமைக்க வேண்டும்?


சாதம், குழம்பு, ரசம், பொரியல், கூட்டு, சில பேரது வீட்டில் வளர்ந்து வரும் நவ நாகரீக சூழ்நிலைக்கு ஏற்ப பலகாரங்கள் கூட செய்யப்படும். அதாவது இட்லி, தோசை, பூரி, பொங்கல் இவைகள் கூட செய்யலாம். ஆனால் நம்முடைய பாரம்பரியப்படி அந்த காலங்களில் எல்லாம் நம் முன்னோர்கள் எந்த முறையை பின்பற்றி வந்தார்கள்?.

அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு, ஒரு சிறிய புராண கதை.

காரைக்கால் அம்மையாரை பற்றிய கதைதான் இது. இந்த காரைக்கால் அம்மையாரை பற்றி நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும்.

சிவபெருமானை காண்பதற்கு கைலாயம் சென்றபோது, 'கைலாயம் என்பது சிவன் வசிக்கும் இடம்'. அந்த இடத்தை காலால் எப்படி மிதிப்பது? என்று, தன்னுடைய தலையால் நடந்து சென்று சிவபெருமானை தரிசனம் செய்த பெருமை இவருக்கு உண்டு.

ஒருநாள் காரைக்கால் அம்மையாரது வீட்டிற்கு சன்னியாசி வேடத்தில் வருகை தந்தார் ‘ஈசன்’.
அந்த காலங்களில் எல்லாம் பிக்ஷை கேட்டு வரும் அடியார்களுக்கு எதுவும் இல்லை என்று சொல்லாமல் உபச்சாரம் செய்வது என்பது நம்முடைய பாரம்பரியமாக இருந்து வந்தது.

அந்த சன்னியாசி பிக்ஷை கேட்டு வந்த அந்த நேரத்தில், காரைக்கால் அம்மையார் வீட்டில் வெறும் சாதம் மட்டுமே இருந்தது. சாதத்துடன் சேர்த்து இரண்டு மாம்பழங்களும் இருந்தன. சாதத்திற்கு குழம்பு எதுவும் இல்லாத நிலையில் என்ன செய்வது என்று தெரியாத அம்மையார், ஒரு பாத்திரத்தில் சாதத்தையும் மாம்பழத்தையும் மட்டும் போட்டு தன் வீட்டிற்குப் பிக்ஷை கேட்டு வந்த அந்த சன்னியாசிக்கு கொடுத்துவிட்டார்.

ஆனால் சன்னியாசி வேடத்தில் வந்திருக்கும் அந்த முனிவர் சிவன் தான், என்ற உண்மை காரைக்கால் அம்மையாருக்கு தெரியாது.

காலை வேலையில், வெறும் சாதத்தை மட்டுமாவது வடித்து வைத்திருந்ததால் தான், பசியோடு வந்த அடியாருக்கு தன் வீட்டில் இருந்த சாதத்தை மட்டுமாவது, காரைக்கால் அம்மையாரால், உணவாக தர முடிந்தது.

அன்று மட்டும் காரைக்காலம்மையார் முதலில் சாதத்தை வடிக்காமல், குழம்பு மட்டுமே வைத்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்? சிந்திக்க வேண்டிய விஷயம் தான் இது.

காரைக்கால் அம்மையார் சிவபெருமானை சரண் அடைந்ததற்கு, இதுவும் ஒரு காரணமாக நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இப்போது தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கான பதில், நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
இதோடு மட்டுமல்லாமல் காலையில் வடித்த சாதத்தோடு சிறிது நெய் சேர்த்து இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைக்கும் பழக்கத்தை நாம் வைத்துக்கொள்ள வேண்டும்.
 
காலையில் எழுந்ததும் நீங்கள் எதை வேண்டுமென்றாலும் சமைக்கலாம். ஆனால், அதையெல்லாம் சமைப்பதற்கு முன்பாக முதலில் சாதத்தை வடிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்வோம்.

அந்த சாதத்தை நெய் விட்டு இறைவனுக்கு நைவேத்தியமாகப் செய்துவிட்டு, அதன்பின்பு அந்த நாளைத் தொடங்கிப் பாருங்கள். நிச்சயமாக வித்தியாசத்தை உங்களால் உணர முடியும். அந்த காலமாக இருந்தாலும், இந்த காலமாக இருந்தாலும், நம்முடைய சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயம் எதுவுமே பொய்யாகாது.

காரணமில்லாமல் எந்த ஒரு செயலையும் நம் முன்னோர்கள் நமக்காக சொல்லி வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.