Breaking News :

Sunday, February 23
.

காளஹஸ்தியில் நாக தோஷ நிவர்த்தி பூஜை எப்படி?


காளஹஸ்தி சென்று அங்கு  இரண்டு வெள்ளி நாகங்கள் வாங்க வேண்டும். இது கோயிலுக்கு முன்புறம் விற்கப்படும். ஒரு கறுப்பு நாகம். ஒரு வெள்ளை நாகம் என இரு நாகங்கள் வாங்க வேண்டும்.

ஆறு, கருப்பு ரவிக்கை துண்டு, ஆறு, சிவப்பு ரவிக்கை துண்டு வாங்க வேண்டும், ஆறு புளியோதரை, ஆறு தயிர் சாதம் வாங்கிக் கொள்ள வேண்டும். பின் தேங்காய், பழம், புஷ்பம், கற்பூரம், ஊதுபத்தி இவைகளை வாங்கிக் கொண்டு பணம் கட்டி அர்ச்சனை டிக்கெட் பெற்றுக் கொண்டு கோயிலினுள் செல்ல வேண்டும்.

கோயிலினுள் சென்று ஸ்ரீ காளஹஸ்தி நாதர் இருக்கும் சன்னதிக்கு எதிரில் பரிகார பூஜை செய்யும் இடத்திற்குச் செல்ல வேண்டும்.

பின்னர் அங்கிருக்கும் புரோகிதரிடம் இரு நாகங்களையும், பூஜைப் பொருட்களையும் கொடுக்க வேண்டும். அங்குப் புரோகிதர் உங்களை அமரச் செய்து கையில் இரு நாகங்களையும் வைத்து குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் சர்ப்ப சாந்திக்கான மந்திரங்களை சொல்வார். அவர் சொல்ல சொல்ல நாம் பரிகார பூஜைகளை செய்ய வேண்டும்.
 
கடைசியாக அந்த நாகங்களை கையில் எடுத்துக்கொண்டு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி சன்னதிக்கு வந்து சிவபெருமானை தரிசனம் செய்துவிட்டு, அங்குள்ள உண்டியலில் இரண்டு நாகங்களையும் தலையை சுற்றிப் போட வேண்டும். பின்பு ஞானப்பிரசுன்னாம்பிகையை தரிசனம் செய்துவிட்டு வெளியேற வேண்டும்.

அங்கிருந்து வெளியே வந்து ரவிக்கைத் துணிகளை சுமங்கலிப் பெண்களுக்கு தானம் செய்ய வேண்டும். பின்பு 12 தயிர், புளியோதரை சாதப் பொட்டலங்களையும் அங்குக் கோயிலின் முன் வீற்றிருக்கும் ஊனமுற்றோர்களுக்குத் தானமாக கொடுக்க வேண்டும்.

பின்னர், அங்கு  அறை எடுத்துத் தங்கி விட்டு காலையில் எழுந்து மறுபடியும் காளஹஸ்தி நாதர் கோயில் இருக்கும் திசையை நோக்கி வணங்கிவிட்டு ஊர் திரும்ப வேண்டும்.
 
இதுவே முறையான நாக தோஷ நிவர்த்தி  செய்யும் முறையாகும். இது நடைமுறையில் நல்ல பலனை அளிக்கிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.