Breaking News :

Wednesday, February 05
.

நரம்பு நோய்களை குணமாக்கும் இடுக்கு பிள்ளையார்


எந்த நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தாலும் திருவண்ணாமலையில் உள்ள இடுக்கு பிள்ளையார் சன்னதிக்குள் சென்று வந்தால் பலன் கிடைக்கும்.

திருவண்ணாமலையில் எத்தனையோ விநாயகர்களை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். ஆனால் இடுக்கு பிள்ளையார் தனித்துவம் கொண்டவர். திருவண்ணாமலை கிரிவல பாதையில் குபேர லிங்கத்தை தாண்டியதும் வலது பக்கத்தில் இடுக்கு பிள்ளையார் சன்னதி உள்ளது. இந்த இடுக்கு பிள்ளையார் ஒரு பகுதி வழியாக உள்ளே சென்று மறுபகுதி வழியாக வெளியேற வேண்டும்.

படுத்த நிலையில் ஊர்ந்தபடி உடலை குறுக்கி கொண்டுதான் இந்த பிள்ளையாருக்குள் நுழைந்து வெளியே வரமுடியும். இதனால் பெண்களுக்கு கர்ப்பபை கோளாறுகள் நீங்குவதாக ஐதீகம். நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தாலும் இடுக்கு பிள்ளையாருக்குள் சென்று வந்தால் பலன் கிடைக்கும்.

இந்த இடுக்கு பிள்ளையாருக்குள் இடைக்காட்டு சித்தர் மூன்று யந்திரங்களை பதித்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இந்த யந்திரங்கள் தரும் அதிர்வு காரணமாகத்தான் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் விலகுவதாக கூறப்படுகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.