Breaking News :

Sunday, February 23
.

கோழி பிரியாணி செய்வது எப்படி?


தேவையானவை:

பாசுமதி அரிசி - 1கிலோ,
கோழிக்கறி - முக்கால் கிலோ.
பெ. வெங்காயம் - கால் கிலோ, தக்காளி -150 கிராம்
தேங்காய் பால் சேர்ப்பதென்றால் முற்றிய தேங்காய் -1
நெய்-300கி, தயிர் -100கிராம் புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை சிறிதளவு
எலுமிச்சை பழம் -1

மசாலா அரைக்க :-
புதினா இலை - 1 கைப்பிடியளவு, ப.மிளகாய் -4 மிளகு - 2 ஸ்பூன், சீரகம் - 1 ஸ்பூன், சோம்பு - 2 ஸ்பூன் பட்டை - 4 சிறிய துண்டு, கிராம்பு-4, இஞ்சி - 100 கிராம் பூண்டு - 100கி. சி.வெங்காயம் - 150கி, மிளகாய்த்தூள் - சிறிது மஞ்சள்தூள் - சிறிது. உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

தாளிக்க:-
புதினா இலை, கருவேப்பிலை, மல்லிச்செடி, முந்திரிப்பருப்பு-50கி

செய்முறை
மசாலா சாமான் எல்லாவற்றையும் நன்றாக அரைக்கவும் தேங்காயை பாலாக ஊற்றுவது என்றால் பால் பிழிந்து வைத்துச் கொள்ளவும் இல்லையென்றால் மசாலா சாமானுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நீளவாக்கி நறுக்கிக் கொள்ளவும்.

பாசுமதி அரிசியை தண்ணீர் ஊற்றி களைந்து, பிறகு தண்ணீர் ஊற்றி 10 (அ) 15 நிமிடம் ஊற வைக்கவும் (பிரியாணி செய்வதற்கு முன் அரிசியை பக்குவப்படுத்தி விட்டு தயாரிக்க ஆரம்பிக்கவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி, தாளிக்கிற சாமானைப் போட்டு கிளறி புதினாஇலை. கறிவேப்பிலை போட்டு முந்திரியையும் போடவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தையும் தக்காளியையும் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலாவையும் போட்டு பச்சை வாசனை போகும்வரை வதக்கி கோழிக்கறியைப் போட்டு நன்றாக கிளறி மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து, தயிர் சேர்த்து கறி நன்றாக வதங்கியதும் ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் போட்டு கிளறி ஒன்றுக்கு இரண்டு என்ற அளவில் (1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர்) ஊற்றி, ஒரு கொதி வந்ததும் உப்புப் போட்டு வைக்கவும்.

கறியும் அரிசியும் நன்றாக சேர்ந்து வெந்தவுடன் நெ சேர்த்துக் கிளறவும் இளம் தீயில் வேக விடவும். தேங்காய் சேர்ப்பதென்றால் தேங்காய்ப் பாலுடன் தண்ணீர் அளவை சேர்க்கவும்.
பிரியாணி தயாரானவுடன் இறக்கி வைத்து எலுமிச்சம்பழம் பிழிந்து, நெய் சேர்த்துக் கிளறி புதினா, கொத்தமல்லி தூவவும்.

சால்னா, தயிர் பச்சடியுடன் பரிமாறவும். (சிறிதளவு கேசரி பவுடரை தண்ணீரில் கரைத்து பிரியாணி வேகும்போது ஊற்றினால் பிரியாணி கலராக இருக்கும்).

தயிர் பச்சடி :- நறுக்கிய பெ.வெங்காயம், தக்காளி, ப.மிளகாய் உப்புப் போட்டு பரிமாறுவதற்கு முன் தயிர் ஊற்றி மாதுளம் பழம் உதிர்த்து போட்டு கொத்தமல்லித்தழைத் தூவி பிரியாணியுடன் பரிமாறவும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.