தேவையானவை:
வரகரிசி-1கப்.
தேங்காய் எண்ணெய்-4 தேக்கரண்டி.
கிராம்பு-1
பட்டை-1
சோம்பு-1 தேக்கரண்டி.
பிரியாணி இலை-1
வெங்காயம்-1
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.
பச்சை மிளகாய்-2
உப்பு- தேவையான அளவு.
புதினா, கொத்தமல்லி-சிறிதளவு.
உருளை-1கப்.
பட்டாணி-1 கப்.
கேரட்-1 கப்.
பீன்ஸ்-1 கப்.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
பிரியாணி மசாலா-1 தேக்கரண்டி.
தயிர்-2 தேக்கரண்டி.
வரகரிசி பிரியாணி செய்முறை விளக்கம்.
முதலில் பவுலில் 1 கப் வரகரிசியை எடுத்துக்கொண்டு நான்கு முறை நன்றாக தண்ணீரில் கழுவி விட்டு அரிசி மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 15 நிமிடம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது அடுப்பில் ஃபேனை வைத்து 4 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்விட்டு பட்டை1, காராம்பு 1, பிரியாணி இலை 1, சோம்பு 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் 2, நறுக்கிய வெங்காயம் 1, உப்பு தேவையான அளவு, 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட், புதினா கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது இதில் பட்டாணி 1கப், கேரட் 1கப், உருளை 1 கப், பீன்ஸ் 1 கப் சேர்த்து நன்றாக வதக்கவும்.
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி,மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, பிரியாணி மசாலா 1 தேக்கரண்டி, 2 தேக்கரண்டி தயிர் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும். மசாலாவுடைய பச்சை வாசம் போய் காய்கறிகள் வெந்ததும் 1 கப் வரகரிசிக்கு 2 கப் தண்ணீர் விட்டு கொதித்ததும் அரிசியை சேர்த்துக் கிண்டவும். பிறகு மூடிப்போட்டு 25 நிமிடம் நெருப்பை குறைத்து வைத்து லோ பிளேமில் வேக விட்டு எடுத்தால் கமகம வரகரிசி பிரியாணி தயார்.